Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

simhika

அனுமன் ஸ்ம்ஹிகாவை வதம் செய்தல்

திடீரெனத் தன் வேகம் தடைப்படுகிறதே என எண்ணிய ஆஞ்சநேயர் சுற்றெங்கிலும் பார்த்தார். திடீரெனப் பின்னி இழுக்கப்பட்டு தடைப் பட்டிருக்கிறேனே இதன் காரணம் என்ன? என்னுடைய வீரம் மழுங்கி விட்டதே என்று சிந்திக்கலானார். அப்போது கடலில் வீற்றிருக்கும் ஒரு பெரிய உருவத்தைக் கண்டார். வானர ராஜனான சுக்ரீவன், “ஸாயாக்ராஹி” என்ற பூதத்தைப் பற்றி முன்னமே கூறி இருந்தது அவருடைய நினைவுக்கு வந்தது. “அது இது தானோ? நிழலைப் பற்றி இழுக்கக் கூடிய மாயசக்தி படைத்த பூதம் இதுவாகத் தான் இருக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

Scroll to top