Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

சமுத்திர ராஜன்

சமுத்திர ராஜனும் மைனாகப் பர்வத சிரேஷ்டரும் அனுமனுக்குச் சகாயம் செய்ய விழைதல்

இஷ்வாகு குலத்தின் உத்தமரான ஸ்ரீராமருக்குக் கைங்கர்யமாய் சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கும் வானர குல சிரேஷ்டரான அனுமனை கௌரவிக்க சமுத்திர ராஜன் யோசனை செய்தான். அதன் பின்னர் தன்னுள் மறைந்திருக்கும் மைனாகப் பர்வத சிரேஷ்டனைப் பார்த்து, “நமது கௌரவமிக்க விருந்தாளியான அனுமன் உன்மீது இளைப்பாறி செல்ல ஏதுவாக நீ மேலெழுந்து வருவாயாக” எனக் கேட்டுக் கொண்டான். சமுத்திர ராஜனின் வார்த்தைகளைக் கேட்ட மைனாகப் பர்வதம் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு மேலே எழும்பியது.

Scroll to top