சமுத்திரத்தைத் தாண்ட அனுமன் ஆயத்தம் ஆதல்!
ஜாம்பவானால் தூண்டப்பட்ட ஆஞ்சநேயர் சாரணர்கள் சஞ்சரிக்கும் ஆகாய மார்க்கத்தில், ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவி சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினார். அளவற்றதாய் சரீரத்தை வளர்த்துக் கொண்ட ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்ட, அம்மலையை தன்னுடைய கரங்களாலும் கால்களாலும் அழுத்தினார்.