தீராப் பிணிகள் தீர்ந்து போக

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தற்பொழுது திருச்செங்கோடு என வழங்கும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று இறைவனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு குடபுலத்துத் தலங்களைத் தரிசித்து திருநணா என்னும் தலம் இறைஞ்சி மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் திரும்பி அங்கு உரையுங் காலத்தில் பனிக்காலம் வந்தணைய குளிர்சுரம் பரவி மக்களை வருந்தியது. திருஞானசம்பந்தருடன் உறையும் பரிசனங்களையும் அந்நாட்டில் அவர்கள் பயின்ற காரணத்தால் அக்குளிர் சுரம் பற்றியது.
அது கண்டு அந்நோய் தீர நமது ஞானசம்பந்தர் “அவ்வினைக்கிவ்வினை” என்றெடுத்து “ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்தெம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது நீலகண்டம்” என்றே பதிகம் பாடியருளினார். அப்பதிகத்தினில் திருநீலகண்டம் என்ற குறிப்பினால் ஆணை நிகழ் அதன் காரணமாக அடியார்க்குமின்றி அந்நாடு முழுவதுமே குளிர்சுரம் நீங்கி நலம் பெற்றது. இன்றும் இத்திருப்பதிகத்தை நாள்தோறும் நியமமாகப் பாராயணம் செய்தால் சுரம் முதலிய கொடிய நோய்கள் பலவும் நீங்கிப் பெறுதல் ஆன்றோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழ

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருவாவடுதுறை (நாலடி மேல்வைப்பு) பண்: காந்தார பஞ்சமம். 3 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம் இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே [1] வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன் தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று […]

இடர்கள் நீங்கி இன்பம் பெற – இடர் களையும் பதிகம்

திருப்பாற்றுறை, திருவெறும்பியூர்த் திருமலை முதலிய தளங்களை வணங்கிய திருஞானசம்பந்தப் பெருமான் திருநெடுங்களத்தையடைந்து இறைவனை அன்பால் “நில்பால் நேசம் செலாவததைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்” என்னுமிப் பதிகத்தைப் பாடியருளினார். ஒவ்வொரு திருப்பாடலிலும் ‘இடர் களையாய்’ என்ற குறிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுபற்றியே இடர்களையும் திருப்பதிகமாய் பெரியோர்களால் கொள்ளப்பட்டுள்ளது.

தொல்வினைகள் தொலைந்து போக

1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருப்பிரமபுரம். இது சீகாழி எனப் பிரசித்தமாய் வழங்கப்படும் தலம். சீர்காழி என்றும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் – மாயவரம் மார்க்கத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது. பண்: நட்டபாடை. 1 ஆம் திருமுறை. திருச்சிற்றம்பலம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1) முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் […]

லங்காதேவியை அனுமன் வெற்றி கொள்ளுதல்

லங்காதேவி பார்ப்பதற்கு விகாரமாக இருந்தாள். அவள் லங்கையின் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டிருந்தாள். லங்கைக்குள் புகுந்த அனுமனை ஓங்கி அறைந்தாள் லங்காதேவி.

கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

கண்ணன் எம்பெருமான் பிறந்த சமயத்திலேயே நான்கு தோள்களோடு சங்கு சக்கரம் ஏந்திப் பிறந்தான். எனினும் அது கண்ட பயந்த தேவகி கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் இரு புஜங்களை மறைத்துக் கொண்டு சாதாரண குழந்தையாகவே தன்னைக் காட்டிக் கொண்டான்.

அஹிம்சா பரமோ தர்ம:

காதி என்று அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு விஸ்வாமித்திரன் என மகன் ஒருவன் இருந்தார். க்ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்த அரசனான விஸ்வாமித்திரன் அடிக்கடி கானகத்தில் வேட்டைக்குச் செல்வது உண்டு. ஒருசமயம் வேட்டையின் போது களைப்பு ஏற்படவே, கானகத்தின் அமைந்திருந்த முனிவர் ஒருவரின் ஆசிரமத்திற்கு வந்தார். அந்த ஆசிரமம் வஷிஷ்ட முனிவருடையது. வந்த விஸ்வாமித்திர மன்னனை வரவேற்ற வஷிஷ்டர் அவருக்குத் தேவையான உணவு நீர் யாவையும் கொடுத்து அவரை நல்ல முறையில் உபசரித்தார். வஷிஷ்டரிடம் நந்தினி என்ற காமதேனு […]

இலங்கை குறித்து அனுமன் சிந்தனை செய்தல்

பேரிகை முதலான வாத்தியங்களில் ஒலிகள் ஒரு பக்கமும், மக்கள் அணிந்திருந்த அணிகலண்களின் சலசலப்புகள் ஒரு பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. லங்கை முழுவதும் தீபங்களின் ஒளி வெள்ளத்தால் எங்கும் இருட்டே இல்லாமல் பிரகாசமாக இருந்தது. லங்கைக்கு அதிஷ்டான தேவதையாக லங்காதேவி என்ற அரக்கி ஒருவள் இருந்தாள். அவள் தன் சுயரூபத்தோடு இருந்தாள். 

லங்கையின் அழகை அனுமன் வியத்தலும் லங்காதேவி அனுமனைக் கண்டு விடுதலும்

மேகங்களால் சூழப்பட்டு, நக்ஷத்திரக் கணங்கள் அதன் மீது ஒளி வீசி நகரை மேம்படுத்திக் கொண்டிருந்தன. கொடிகளில் இருந்த சலங்கை மணிகள் மெல்லிய ஒலி எழுப்பின. அனுமன் இக்காட்சியைக் கண்டு கொண்டே மதில் சுவரை வந்து அடைந்தார். நகரைச் சுற்றி கண்ணோட்டம் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார் அனுமன்.

அனுமன் இலங்கைக்குள் பிரவேசித்தலும் இலங்கையின் அழகைக் கண்ணுருதலும்

சீதையைப் பார்க்க முடியுமா என்ற கவலை ஒருபுறமும், அவரைக் கண்டு விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும் அஞ்சனை மைந்தனுக்கு இருந்தது. தங்கமயமாக இருந்த லங்கை ராவணனுடைய புஜபல பராக்ரமத்தாலும், வீரம் கொண்ட அரக்கர்களாலும் பாதுகாக்கப்பட்டது.

Scroll to top