Sarvap Praharanayuthan

One who uses everything as his weapon!

Spiritual

அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

நந்தகோபரின் உறவினர் அக்ரூரர். கம்சனிடம் அரசவைப் பணியாளராக இருந்தார் அக்ரூரர். கண்ணன் மேலே மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் கொல்லத் திட்டம் தீட்டிய கம்சன் அவரை அழைத்து வர நம்பகமான ஒருவரைத் தேடியபோது அவனுக்கு அக்ரூரரைப் பற்றிய நினைவு வர, அக்ரூரரை அழைத்து கண்ணனைக் கூட்டி வரச் சொன்னான்.

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமான் கோவில் கொண்ட திருத்தலம் திருக்கோளூர். அப்பெருமானை சேவிக்க உடையவர் வந்த சமயம் ஒரு பெண்பிள்ளை சோகத்தோடு வெளியேறினாள். அவள் வெளியேற கூறிய காரணங்களே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.

சுமித்திரை லக்ஷ்மணனிடம் கூறியது!

“மகனே! ராமனின் பின்னால் செல், தம்பியாய் அல்ல. ஒரு அடியாராய் அவனுக்குச் சேவகம் செய்வாய். அவன் திரும்ப இந்நகர் வந்தானெனில் நீயும் வா. ஒருவேளை அவன் இறந்து போவானென்றால் அவனுக்கும் முன்னதாகவே நீ முடிந்து போய் விடு”. என்றாள்.

சக்ரத்தாழ்வார் வைபவம்

திருமாலுக்குப் பிரதானமாக ஐந்து ஆயுதங்கள் உண்டு. ஆகையால் அவருக்குப் பஞ்சாயுதன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. திருமால் தன் சங்கல்ப்ப சக்தியை ஒரு ஆயுதமாக உருவாக்கி, அதை ஆயுதங்களின் அரசனாக ஆக்கினார். அதுவே ஸ்ரீசுதர்சனச் சக்கரம் ஆகும். ஆயுதங்களின் அரசன் என்பதால் இவருக்கு “ஹேதி ராஜன்” எனும் திருநாமம் கிட்டியது.

அகால மரணமும் துர்மரணமும் விலக – விடந்தீர்த்த திருப்பதிகம்

தம்மீது பக்தி கொண்ட அப்பூதி அடிகளாரின் மூத்த குமாரன் பாம்பு தீண்டி இறந்து போக, அவனை திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார் திருநாவுக்கரசர். அப்பதிகம் விடந்தீர்த்த பதிகம் என அழைக்கப்படுகின்றது.

தீராப் பிணிகள் தீர்ந்து போக

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தற்பொழுது திருச்செங்கோடு என வழங்கும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று இறைவனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு குடபுலத்துத் தலங்களைத் தரிசித்து திருநணா என்னும் தலம் இறைஞ்சி மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் திரும்பி அங்கு உரையுங் காலத்தில் பனிக்காலம் வந்தணைய குளிர்சுரம் பரவி மக்களை வருந்தியது. திருஞானசம்பந்தருடன் உறையும் பரிசனங்களையும் அந்நாட்டில் அவர்கள் பயின்ற காரணத்தால் அக்குளிர் சுரம் பற்றியது.
அது கண்டு அந்நோய் தீர நமது ஞானசம்பந்தர் “அவ்வினைக்கிவ்வினை” என்றெடுத்து “ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்தெம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது நீலகண்டம்” என்றே பதிகம் பாடியருளினார். அப்பதிகத்தினில் திருநீலகண்டம் என்ற குறிப்பினால் ஆணை நிகழ் அதன் காரணமாக அடியார்க்குமின்றி அந்நாடு முழுவதுமே குளிர்சுரம் நீங்கி நலம் பெற்றது. இன்றும் இத்திருப்பதிகத்தை நாள்தோறும் நியமமாகப் பாராயணம் செய்தால் சுரம் முதலிய கொடிய நோய்கள் பலவும் நீங்கிப் பெறுதல் ஆன்றோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

Scroll to top